JKT ஒருங்கிணைந்த பண்ணைக்கு உதவிய இத்தாலியில் வசிக்கும் திருமதி. ஜெய
இத்தாலி பலேர்மோவில் (Palermo) வசித்து வரும் எமது மதிப்பிற்குரிய திருமதி. ஜெய அக்கா அவர்களுக்கு, இத்தாலி மனிதநேய சங்கம் மற்றும் JKT ஒருங்கிணைந்த பண்ணையின் அன்பான வணக்கங்கள்.
தன்னலம் கருதாது தாயக உறவுகளுக்குத் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வரும் ஜெய அக்கா, இன்று எமது பண்ணையில் உள்ள 24 பசுக்களுக்காக *பயறு மற்றும் அகத்திக் கீரை* வழங்கி ஒரு உன்னதமான நற்காரியத்தைச் செய்துள்ளார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" - என்பதற்கு இணங்க, மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்றைய உயிர்களிடமும் அக்கா காட்டும் இந்த அளவற்ற அன்பு பாராட்டுதலுக்குரியது.
ஜெய அக்கா அவர்களின் இந்த ஈகை குணம் மேலும் தொடரட்டும். அவர் செய்த இந்த தர்மம், அவர் குடும்பத்திற்கு மன அமைதியையும், நீடித்த ஆயுளையும், சகல செல்வங்களையும் பெற்றுத் தர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அவரின் மனிதநேயப் பணிகள் மென்மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(வீடியோ இங்கே )