செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரங்கள்? - நாசாவின் அதிரடி கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான மிக நெருக்கமான ஆதாரங்களை நாசாவின் கியூரியோசிட்டி (Curiosity) விண்கலம் கண்டறிந்துள்ளது.
சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் சிக்கலான கரிம மூலக்கூறுகள் இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயின் 'கேல் கிரேட்டர்' (Gale Crater) பகுதியில் உள்ள 'கிளென் டோரிடன்' (Glen Torridon) என்ற இடத்தில் களிமண் நிறைந்த மணற்பாறைகளை கியூரியோசிட்டி ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் நாப்தலீன் மற்றும் பென்சோதியோபீன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கரிம மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதன்முறையாக செவ்வாயில் டிஎன்ஏ உருவாக்கத்திற்குத் தேவையான நைட்ரஜன் கலந்த வேதியியல் கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
TMAH' என்ற வேதியியல் முறையைப் பயன்படுத்தி, பாறைகளில் மறைந்திருந்த சிக்கலான மூலக்கூறுகளை உடைத்து இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் ஆமி வில்லியம்ஸ் (Amy Williams) கூறுகையில், "இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. இவை சிக்கலான வேதியியல் கட்டமைப்புகளுக்கான முன்னோடிகளாக இருக்கலாம்.
செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்தது என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியைத் துளையிட்டு, அங்குள்ள பாறைகளின் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்வது.13 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயில் பயணித்து வரும் இந்த விண்கலம், இதுவரை பல முக்கிய உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தக் கரிம மூலக்கூறுகள் நேரடியாக உயிரினங்களால் உருவாக்கப்பட்டதா அல்லது விண்கற்கள் மூலம் வந்ததா என்பதைத் துல்லியமாக அறிய, செவ்வாயிலிருந்து பாறைகளை பூமிக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், விண்வெளி ஆய்வில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )