இத்தாலியில் 2 இந்திய ஆண்கள் சுட்டுக் கொலை
இத்தாலியின் பெர்கமோ மாகாணத்தில் உள்ள கோவோவில், வைசாகி பண்டிகைக் கூட்டத்தின் போது வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கிடங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இரண்டு இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் நகரின் தொழில்துறை பகுதியில் உள்ள குருத்வாரா மாதா சாஹிப் கவுர் ஜிக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நிகழ்ந்தது.
கொல்லப்பட்டவர்கள், கோவோவைச் சேர்ந்த 48 வயதான ரகிந்தர் சிங் மற்றும் அக்னடெல்லோவைச் சேர்ந்த 48 வயதான குர்மித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் அவர்களை அணுகி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பின்னர் ஒரு காரில் தப்பிச் சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, திடீரென ஏற்பட்ட கைகலப்பு தாக்குதலாக மாறியிருக்கலாம் என்ற என்று நம்பப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அந்த குருத்வாராவிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு இந்தியர் என்று ஒரு சாட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துளளார்.
(வீடியோ இங்கே )