17 இலட்சம் சம்பளத்தை உதறித் தள்ளிய IIT பட்டதாரி: இணையத்தில் வைரலாகும் பின்னணி காரணம்!
#SriLanka
#Lanka4
#Salary
#Internet
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
வாழ்க்கையில் ஒருமுறை கிடைப்பதே அரிது என்று கருதப்படும் வங்கி வேலையை, ஐஐரி பட்டதாரியான சிராக் மதன் என்பவர் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் கூறியுள்ள காரணங்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம், ஓய்வில்லாத வேலை மற்றும் விடுப்பு எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், மதிய உணவு இடைவேளைக்கு வெறும் 15 நிமிடங்களுகள் ஒதுக்கப்பட்டமை மற்றும் வங்கி இலக்குகளை (Targets) அடைவதற்காகத் தேவை அற்ற திட்டங்களை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் என்பவற்றின் காரணமாகவே அவர் குறித்த வேலையை இராஜினாமா செய்துள்ளார்.
மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட விரும்பாத அவர், அந்த "குற்றவுணர்ச்சியால்" தனது வேலையைத் துறந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மன அமைதிதான் முக்கியம் என்பதை இவரது செயல் மீண்டும் உணர்த்தியுள்ளது.
(வீடியோ இங்கே )