இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி
இராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பரிமாற்றத்தை உள்ளடக்கிய, இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது என்று பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
"தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தானியங்கிப் புதுப்பித்தலை இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று வெரோனாவில் நடந்த ஒரு நிகழ்வில் மெலோனி குறிப்பிட்டுள்ளார்.
2006ல் இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது.
பாதுகாப்புத் தொழில்கள், இராணுவ வீரர்களின் கல்வி மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்புக்கு இது அழைப்பு விடுக்கிறது.
லெபனானில் உள்ள இத்தாலிய ஐ.நா. அமைதிப்படை வாகன அணிவகுப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இத்தாலிய அரசாங்கம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
(வீடியோ இங்கே )