இங்கிலாந்தில் 16 வயது சிறுவன் கொலை வழக்கில் நால்வர் கைது
இங்கிலாந்தின்பீட்டர்பரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து நான்கு பதின்ம வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இனவெறி நோக்கத்தால் நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லையென கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடமான ரைஸ்ஹோம் பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் தொடர்ந்து அமலில் உள்ளன. மேலும் அங்கு மக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், 15 வயது சிறுவன் மற்றும் 18 வயது இளைஞர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 மற்றும் 17 வயது இரண்டு சிறுமிகள் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 16 வயது மற்றொரு சிறுமி கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )