ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தல்
#America
#Lanka4
#Soldiers
#Germany
#Military
#L4
Prasu
5 hours ago
ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 38,000 அமெரிக்க ராணுவ வீரர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியான AfDயின் இணைத் தலைவர் டினோ ச்ருபல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெர்மனி தனது முழுமையான இராணுவ இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்றும், அமெரிக்கா தனது போர்களுக்கான தளமாக ஜெர்மனியைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
குறிப்பாக, மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி ஒரு ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸ்பெயினின் நிலைப்பாட்டை உதாரணமாகக் காட்டியுள்ள அவர், ஜெர்மனியும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )