வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் விமான சேவை பாதிப்பு
#Flight
#Airport
#strike
#Lanka4
#Germany
#cancelled
Prasu
1 hour ago
லுஃப்தான்சா மற்றும் அதன் பிராந்தியப் பிரிவான லுஃப்தான்சா சிட்டிலைன் ஆகியவற்றின் விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சுமார் 72000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
முடங்கிய பேச்சுவார்த்தைகளால் இந்த வேலைநிறுத்தம் ஒரு “தவிர்க்க முடியாத ஒன்று என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், லுஃப்தான்சா இந்த நடவடிக்கையை “முற்றிலும் விகிதாசாரமற்றது” என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மேற்படி போராட்டத்தின் விளைவாக , லுஃப்தான்சாவின் புதிய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டி ஏர்லைன்ஸ், போட்டியாளரான வெர்டி தொழிற்சங்கத்துடன் தனது முதல் கூட்டு ஊதிய ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையெழுத்திட்டுள்ளது.
(வீடியோ இங்கே )