பிரான்சில் ஓடுபாதை அருகில் வெடித்த பட்டாசுகள் - திசைதிருப்பப்பட்ட ஈஸிஜெட் விமானம்
ஓடுபாதைக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், வெனிஸிலிருந்து வந்த ஈஸிஜெட் பயணிகள் விமானம் ஒன்று பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்க தடை ஏற்பட்டுள்ளது.
தீப்பொறிகளையும் புகை மண்டலங்களையும் கண்ட விமானி, மாற்று ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்தைச் சுற்றி வட்டமிட்டுள்ளது.
அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகவும், பட்டாசுகளால் விமானத்திற்கு நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்தச் சம்பவத்தால், ஒரு ஓடுபாதை கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள அப்லான்-சுர்-செய்ன் மற்றும் வில்லென்யூவ்-லெ-ராய் ஆகிய நகரங்களின் குடியிருப்பாளர்களால் இந்தப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்குப் பொறுப்பானவர்களை அதிகாரிகள் இன்னும் அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ இல்லை.
(வீடியோ இங்கே )