ஈரானின் அடுத்த நகர்வு என்ன? போர் நிறுத்த முன்மொழிவுகளுக்குப் பதிலளிக்கத் தயார்!

#world_news #Lanka4 #Iran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
ஈரானின் அடுத்த நகர்வு என்ன? போர் நிறுத்த முன்மொழிவுகளுக்குப் பதிலளிக்கத் தயார்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலைத் தயார் செய்துள்ளதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரச செய்தி நிறுவனமான 'இர்னா' (IRNA) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவினால் மத்தியஸ்தர்கள் ஊடாக வழங்கப்பட்ட 15 அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

"எமது நாட்டின் நலன்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் எமது சொந்தத் தேவைகளை நாங்கள் தொகுத்துள்ளோம்" என பாகேய் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய திட்டத்தை வகுப்பதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருவதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஈரானின் நிலைப்பாடுகள் மற்றும் 'சிவப்பு கோடுகள்' (Red Lines) எவை என்பதில் ஈரான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருப்பதாகவும், அதற்கேற்ப பதில்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தவறினால், ஈரானின் பொது உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், "யுத்தக் குற்றங்களை இழைப்போம் என்ற அச்சுறுத்தல்களுக்கும், இறுதி எச்சரிக்கைகளுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் வகுத்துள்ள புதிய பதில்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!