பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்
#Pakistan
#Country
#World
#Terrorists
#L4
Prasu
2 hours ago
ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் இயங்கி வருகிறது.
நியூயார்க், பிரசெல்ஸ், மெக்சிகோ சிட்டி, ஹரேரே உள்ளிட்டவற்றில் நிறுவனங்களை அமைத்து உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.
உலகின் மக்கள் தொகையில் 99.7 சதவீதத்தை உள்ளடக்கிய 163 நாடுகளில் 2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, புர்க்கினா பாசோவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் இந்த இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்து முக்கிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
அதில் கடந்த 2025ம் ஆண்டில் 1,139 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.
(வீடியோ இங்கே )