கப்பல் மீது மர்ம தாக்குதல் - கப்பல் ஊழியர்களின் நிலை என்ன?

#world_news #Attack #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
கப்பல் மீது மர்ம தாக்குதல் - கப்பல் ஊழியர்களின் நிலை என்ன?

கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

ராஸ் லஃப்பானுக்கு கிழக்கே சுமார் 4 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது மர்மப் பொருள் ஒன்று கப்பலின் மீது மோதித் தாக்கியுள்ளதாக UKMTO தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டார் கடல் எல்லைக்கு அருகே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4