ரமலான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மற்றும் தலிபான்கள் ஒப்புதல்

#Festival #Afghanistan #Taliban #Pakistan #Ramadan #L4 #conflict
Prasu
3 months ago
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மற்றும் தலிபான்கள் ஒப்புதல்

மோதலுக்கு மத்தியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன.

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி உள்ளிட்ட சகோதர இஸ்லாமிய நாடுகள் ஈத் அல்-ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு இந்த இடைநிறுத்தத்தைக் கோரியதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரரின் கூற்றுப்படி, இந்த இடைநிறுத்தம் புதன்கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கும்.

"பாகிஸ்தான் இந்த செயலை நல்ல நம்பிக்கையுடனும், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்பவும் வழங்குகிறது" என்று தரார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரும் பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4