மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் லியோ

#War #ceasefire #Pope #Middle East #L4
Prasu
3 hours ago
மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் லியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் பிராந்தியம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மத்திய கிழக்கு மோதலில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று போப் லியோ அழைப்பு விடுத்துள்ளார்.

"மத்திய கிழக்கின் கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சார்பாக, இந்த மோதலுக்கு காரணமானவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: போர் நிறுத்தப்பட வேண்டும்" என்று லியோ வத்திக்கான் நகரில் வார பிரார்த்தனைக்குப் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

மோதல் ஆரம்பித்ததில் கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் உள்ள மக்கள் போரின் கொடூரமான வன்முறையை அனுபவித்து வருகின்றனர் என்று முதல் அமெரிக்க போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

"ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கிய தாக்குதல்களில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை பிரார்த்தனை செய்கிறேன்," என்று அதெரிவித்துள்ளார்.

மேலும், "வன்முறை ஒருபோதும் மக்கள் எதிர்பார்க்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு வழிவகுக்காது" என்று வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!