வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் தீர்மானம்!

#America #world_news #Attack #Country #council #ImportantNews #Security #Gulf #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் தீர்மானம்!

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோரி, வளைகுடா ஒத்துழைப்பு பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, வளைகுடா பிராந்திய நாடுகள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற இந்த முக்கிய வாக்கெடுப்பில், சபையிலுள்ள 13 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இரண்டு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்த போதிலும், தீர்மானத்திற்கு எதிராக எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4