ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் கடும் விளைவு: ஈரான் எச்சரிக்கை!

#America #world_news #War #Warning #Iran #European union #Iraq #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
ஐரோப்பிய நாடுகள்  தலையிட்டால் கடும் விளைவு: ஈரான் எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கைகோர்த்தால், அவைகளும் ஈரானின் தாக்குதலுக்குள்ளாகும் 'சட்டபூர்வ இலக்குகளாக' கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மஜித் தக்-ராவஞ்சி, பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது இந்தக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

"ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் ஏதேனும் ஒரு நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்தால், அந்த நாடுகளும் ஈரானின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு உரிய இலக்குகளாகவே கருதப்படும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

images/content-image/2024/03/1772850286.jpg


மத்திய கிழக்கில் நிலவும் போரில் ஐரோப்பிய நாடுகள் நடுநிலை வகிக்க வேண்டும் அல்லது விலகி இருக்க வேண்டும் என்பதை ஈரான் இந்த அறிவிப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளது. அதே சமயம், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் "நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகவும் தக்-ராவஞ்சி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இராணுவ ரீதியான தலையீடுகள் ஏற்படும் பட்சத்தில், எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை ஈரான் வெளிப்படுத்தியுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4