"என்னை யாரும் மிஞ்சக்கூடாது" - எழுதப்படாத ட்ரம்ப் விதி!
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஓக்லஹோமா செனட்டர் மார்க்வேய்ன் முல்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் நீக்கப்படும் முதல் உயர்நிலை அதிகாரி இவராவார். எல்லைப் பாதுகாப்பில் "புல்லட் புரூப்" அங்கி அணிந்து அதிரடி காட்டிய நோம், ஜனாதிபதியை விடவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தியதே அவரது வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 50,000 பெறுமதியான ஆடம்பரக் கடிகாரத்தை அணிந்து எல் சால்வடார் சிறைக்குச் சென்றது, 220 மில்லியன் அரச நிதியைத் தனது சொந்த விளம்பரங்களுக்காகச் செலவிட்டது மற்றும் சொகுசு விமானப் பயணங்கள் போன்ற புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.
அண்மையில் மினியாபோலிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கப் பிரஜைகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கையாண்ட விதமும் ட்ரம்ப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
நோம் தற்போது "த ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்" (The Shield of the Americas) எனும் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் தூதராக தரம் குறைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )