காமேனியின் படுகொலைக்கு பதிலடி கொடுக்க ஈரான் ஜனாதிபதி மாளிகை உறுதி!
ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் படுகொலையை "ஒரு மிகப்பெரிய குற்றம்" என்று கண்டித்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இதற்குப் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இந்த மிகப்பெரிய குற்றம் ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகாது. இது இஸ்லாமிய உலகம் மற்றும் ஷியா பிரிவின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கும். இந்த உயரிய தலைவரின் தூய்மையான இரத்தம் ஒரு கர்ஜிக்கும் ஊற்றைப் போலப் பாய்ந்து, அமெரிக்க-சீயோனிச ஒடுக்குமுறை மற்றும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்கும்.
" மேலும், "இந்த முறையும், எங்களது முழு வலிமை மற்றும் உறுதியுடனும், இஸ்லாமிய தேசம் மற்றும் உலகின் சுதந்திர மக்களின் ஆதரவுடனும், இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்களையும் அதற்கு உத்தரவிட்டவர்களையும் நாங்கள் வருந்தச் செய்வோம்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துக்க அனுசரிப்பிற்காக 40 நாட்கள் துக்க காலத்தை அறிவித்துள்ள ஜனாதிபதி பெசெஷ்கியன், அத்துடன் கூடுதலாக ஏழு நாட்கள் பொது விடுமுறையையும் அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )