ஈரான் மீது ‘இஸ்ரேல்’ ஏவுகணை தாக்குதல்!
சனிக்கிழமை அதிகாலை ஈரான் மீது 'இஸ்ரேல்' ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் மீது 'இஸ்ரேல்' ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் உறுதி: "ஈரான் மீது நாங்கள் முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்" என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, 'இஸ்ரேல்' நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன.
நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 'இஸ்ரேலிய' உள்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீரென குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது
தெஹ்ரானின் முக்கிய மூன்று தளங்கள் மீது குண்டு வீசப்பட்டுள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தற்போது கூட்டாக தாக்குதல் என தெரிவிக்கின்றன
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்