நைஜீரியாவில் ஆயுதக் குழு நடத்திய தாக்குதல்களில் 33 பேர் கொலை
#Death
#GunShoot
#Cattle
#Nigeria
Prasu
2 hours ago
வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய போராளிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதில் 33 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் பஷீர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆயுதமேந்திய லகுராவா போராளிகள் கால்நடைகளை திருடுவதற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததை முதற்கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன.
லகுராவா குழு வடமேற்கு நைஜீரியாவின் சில பகுதிகளில், குறிப்பாக வடமேற்கு மாநிலமான சோகோட்டோவில் உள்ள சமூகங்களைச் சுற்றி செயல்படுகிறது.
ஆயுதமேந்திய குழு கால்நடை திருட்டு , கிராமங்களில் சோதனைகள் மற்றும் கப்பம் பெறுவதற்காக கடத்தல்களில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.
(வீடியோ இங்கே )