கொலம்பியாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துகுள்ளான விமானம் - 15 பேர் பலி‘!

#SriLanka #Colombia #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
கொலம்பியாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துகுள்ளான விமானம் - 15 பேர் பலி‘!

கொலம்பியாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்தவர்களில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் காங்கிரஸின் வேட்பாளர் கார்லோஸ் சால்செடோ ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 பீச்கிராஃப்ட்  1900 இரட்டை எஞ்சின் கொண்ட டர்போபிராப் (turboprop) விமானம் வெனிசுலா எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட 12 நிமிடங்களில்  விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்புடனான தொடர்பை இழந்துள்ளது.

 மேலும் விபத்துக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4