ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதியில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மரணம்
#Death
#Rain
#Flood
#Climate
#Africa
Prasu
1 hour ago
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொசாம்பிக் நாட்டில் திடீரென கனமழை பெய்ததில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி, வெள்ளத்தில் மூழ்கி, கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
மடாகஸ்கரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாலவி மற்றும் சாம்பியா நாடுகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )