ஆஸ்திரேலியாவை உலுக்கிவரும் காட்டுத்தீ - ஒருவர் பலி, அவசர நிலை பிரகடனம்!
#SriLanka
#Australia
#WildFire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல நாட்களாக பரவி வரும் காட்டுத்தீயால் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்டோரியா மாநிலத்திற்கும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போதைய ஆபத்தை கருத்தில் கொண்டு ஏராளமான மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்