உளவு குற்றச்சாட்டில் ஈரானில் நபர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
#Iran
#Spy
#execute
Prasu
2 months ago
இஸ்ரேலின் மொசாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அலி அர்டெஸ்டானி என்ற நபரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொசாட் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியமைக்காக கிரிப்டோகரன்சி வடிவில் அவர் நிதி வெகுமதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த நபர் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், தகவல்களை வழங்கிமைக்கு பிரதியீடாக நிதி வெகுமதிகள் உட்பட பிரித்தானிய விசாவை பெறுவார் என நம்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )