வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை
#Hindu
#Death
#Bangladesh
Prasu
1 day ago
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
ஷிவ்பூர் உப மாவட்டம் நர்சிங்கடி நகரைச் சேர்ந்தவர் சரத் சக்ரவர்த்தி மணி கடையில் இருந்த அவரை மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த சரத் சக்ரவர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
சரத் சக்ரவர்த்தி மணி தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு, சில ஆண்டுக்கு முன் வங்கதேசத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )