கட்டுநாயக்காவில் போதைப் பொருளுடன் மூவர் கைது - நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் உடமைகளில் 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க வந்தவர்கள் மற்றும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
