இஸ்ரேலில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞர்!
#SriLanka
#Israel
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். டெல் அவிவ்-யாஃபா கடற்கரையில் அவர் குத்திக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் 38 வயதான இலங்கையர் என்றும், கட்டுமானத் துறையில் வேலை செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு காலி, படபோலாவில் இருந்து இஸ்ரேலுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் வாக்குவாதம் அதிகரித்து, அவர் இலங்கையரை கொன்றதாக தகவல் கிடைத்துள்ளதாக நிமல் பண்டார கூறினார்.
அதன்படி, சந்தேக நபரைக் கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த கொலை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
