நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் - விலங்கு நல நிபுணர் எச்சரிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாட்டில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிககையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் மேற்பட்ட நாய் கடிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முறையான திட்டத்தின் கீழ் நாய் கருத்தடை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
