மட்டக்களப்பில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் சமீபத்திய படைப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
அந்தவகையில் கடந்த 23.08.2025 அன்று மக்கள்நாயகம்2 youtube channel இனது 02 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 142 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது மட்டக்களப்பு களுவண்கேணி பிரதேசத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த மாற்று ஆற்றல் உள்ள ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை மகேஸ்வரன்−சுகிர்தமலர் நினைவாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவர்களது மகள் தரணி−சிவகுமார் குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் எம் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



