முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
17 hours ago

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு நாடளாவிய போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல-கிரியிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



