இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்: வெளியான அதிர்ச்சி தகவல்!
#SriLanka
#Fever
#Africa
Lanka4
17 hours ago

இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2,500 பண்ணைகளில் 67,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அத்துடன், பல பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள பாதிக்கப்பட்ட பண்ணைகளில் 251 பண்ணைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர்தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



