கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதியில் தீ விபத்து!
#SriLanka
#fire
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 hours ago

யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.
இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியது.
தீப்பரவலுக்கான காரணம் அறியப்படவில்லை. ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



