மத்திய கிழக்கில் ஆறாவது நாளாக தொடரும் பதற்றம் : மொசாட் அமைப்பின் தலைமையகம் அழிப்பு!
#SriLanka
#world_news
#Israel
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 weeks ago

நீண்டகால எதிரிகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான வான்வழிப் போர் ஆறாவது நாளை எட்டியுள்ளயுள்ளது.
இன்று (18.06) காலை முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேல் மீது இரண்டு சரமாரியாக ஈரானிய ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தனது விமானப்படை ஈரானிய இராணுவ நிலைகளைத் தாக்கும் வகையில், தெஹ்ரான் பகுதியில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கூறியது. தெஹ்ரானிலும் தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய செய்தி வலைத்தளங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலில் மொசாட் அமைப்பின் தலைமையகம் தாக்கியழிக்கப்பட்டதாக ஈரானிய, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



