பேருவளையில் தானியங்கி கேட்டில் சிக்கி நபர் ஒருவர் பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

பேருவளை சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் தானியங்கி கேட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பேருவளை, மஹகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதான முகமது ரிசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பேருவளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



