மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலை : கச்சா எண்ணெய் விலை உயர்வு!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT கச்சா எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் கச்சா எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும் விற்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, 12 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய் WIT கச்சா எண்ணெயின் விலை $68.04 ஆக பதிவாகியிருந்தது, அதே நேரத்தில் ஒரு பீப்பாய் Brent கச்சா எண்ணெய் $69.24 ஆக விற்கப்பட்டது.
அதன்படி, கடந்த வாரத்தில் உலக சந்தையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல கூறினார்.
இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



