இன்றைய ராசிபலன் (14.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (14.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!


மேஷம்:
அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பரணி: வெளியூர் பயணத்தை தவிர்ப்பதும், சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதும் நன்மையாகும். கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெல்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.புனர்பூசம் 1,2,3: மூன்றாமிட கேதுவால் பிறரால் முடியாத வேலையை முடித்துக் காட்டுவீர்கள். வரவு அதிகரிக்கும்.

கடகம்:
புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.பூசம்: குடும்பத்தினர் செயல்பாட்டால் மனக்குழப்பம் கூடும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்:
மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவிபுரிவர்.

கன்னி:
உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கடனை அடைப்பீர்கள். சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.

துலாம்:
சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுவாதி: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்.

விருச்சிகம்:
விசாகம் 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். அனுஷம்: இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடி வரும். கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் உங்களுக்கு மறைமுகமாக தொல்லையளிப்பர்.

தனுசு:
மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். புதிய முதலீடு எதுவும் இன்று வேண்டாம்.உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர். திருவோணம்: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குருப் பார்வையால் நெருக்கடிகள் நீங்கும். சதயம்: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:
பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உத்யோகத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.ரேவதி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747175441.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!