இன்றைய ராசிபலன் (05.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (05.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பரணி: அலுவலகப் பணியில் உங்கள் வேலைகளுக்கு மதிப்புண்டாகும். வழக்கமான வேலைகளில் ஆதாயம் கூடும்.கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர் என்றாலும், அவற்றை சாதுர்யமாக சமாளிப்பீர்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குருவின் பார்வைகளால் உங்கள் எண்ணம் ஈடேறும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சனம் செய்தவர்களும் இன்று பாராட்டுவர்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

கடகம்:
புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் தீரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பூசம்: லாப குருவால் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளில் ஆதாயத்தைக் காண முடியும்.

சிம்மம்:
மகம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் ஆதாயம் இருக்கும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.அஸ்தம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். குரு பகவானின் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: வரவேண்டிய பணம் வரும். நண்பர்களால் ஒரு வேலை நடந்தேறும்.

துலாம்:
சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்.சுவாதி: உங்கள் முயற்சியால் தேவைகள் நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும்.

விருச்சிகம்:
விசாகம் 4: தடைகள் விலகும் நாள். ராசிக்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்களது முயற்சி ஆதாயமாகும். அனுஷம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

தனுசு:
மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். புதிய முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நன்மையாகும்.பூராடம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளியூர் பயணத்தை தவிருங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். மாலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.அவிட்டம் 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சதயம்: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும்.பூரட்டாதி 1,2,3: உங்களது முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

மீனம்:
பூரட்டாதி 4: வருவாய் அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி லாபமாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுயதொழில் புரிவோருக்கு லாபம் ஏற்படும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746396781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!