இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் மஹிந்த!
#SriLanka
#Mahinda Rajapaksa
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
அவர்கள் ஒரு சுமூகமான உரையாடலை நடத்தியதாகவும், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருங்கிய அண்டை நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மரியாதையுடன் நினைவு கூர்ந்தார், மேலும் பல்வேறு துறைகளில் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அது கட்டமைக்கப்பட்டுள்ளது.
(வீடியோ VIDEO)
அனுசரணை



