பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
#SriLanka
#prices
#Lanka4
#Tea
Mayoorikka
1 year ago
நேற்று (31) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவு விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால், தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளதுஇன்று (01) முதல் பால் மாவின் விலையை 4.7 சதவீதத்தால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது. இதனால் பால், தேநீரின் விலைஅதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
