பிரான்சில் அகதிகள் வெளியேற்றத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 46 பேர் கைது
#Arrest
#France
#migrants
Prasu
8 months ago
Gaîté Lyrique கலாச்சார அரங்கில் அத்துமீறி நுழைந்து மாதக்கணக்கில் தங்கியுள்ள அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அதன்போது காவல்துறையினருக்கும் - அகதிகளுக்குமிடையே மோதல் வெடித்தது. Gaîté Lyriqueல் இருந்து வெளியேற மாட்டோம் என அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டாயப்படுத்தி வாகனங்களில் ஏற்ற முற்பட்ட காவல்துறையினருக்கும் அகதிகளுக்குமிடையே மோதல் வெடித்தது.
இதில் 46 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஏழு அகதிகளும் இரண்டு காவல்துறையினருமாவர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
