கனடாவில் தமிழ்ப் பெண் சுட்டுக் கொலை!
#SriLanka
#Canada
Mayoorikka
8 months ago
கனடாவில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 20 வயதான இலங்கை யாழ்ப்பாணம் கோண்டாவிலை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த 26 வயதான ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழுவொன்றினால் திட்டமிட்ட வகையில் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை