பிரான்ஸில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

#Death #France #couple
Prasu
1 year ago
பிரான்ஸில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

பிரான்ஸில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து பிரித்தானிய தம்பதியர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் திருட்டு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த வீட்டின் அருகில் வசித்தவர்களால் அவர்களின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் அடையாளங்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெளியிடவில்லை, அவர்கள் 60 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் என்றும், இருவரும் பிரிட்டிஷ் குடிமக்கள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை அவர்களை அடையாளம் காண்பதைத் தடுக்க இருவரின் அடையாளங்களை வெளியிடவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணை வட்டாரம் ஒன்று, இந்த மரணங்கள் “தவறாக நடந்த திருட்டு”யின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகக் கூறியது. உள்ளூர் வழக்கறிஞர்கள் நீதித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4