கிழக்கு மாகாணத்தை தொடர்ந்து மற்றுமோர் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை!
#SriLanka
#School Student
Thamilini
1 year ago
வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக ஆளுநரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று மற்றும் நாளை மறுநாள் (21) நடைபெறவிருந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான 2024 இறுதித் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்