செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி : 266 மனித எச்சங்கள் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றுள் 266 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டள்ளது.
இதற்கிடையே றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழுத்தில் கட்டப்படும் தாயத்து போன்ற தகடு ஒன்றும் சான்றுப்பொருளாக இனங்காணப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )