2050ம் ஆண்டுக்குள் சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்

#Switzerland #people #population
Prasu
1 year ago
2050ம் ஆண்டுக்குள் சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்

சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது மக்களின் 9 மில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் மக்கள் தொகை 10.4 மில்லியனை எட்டக்கூடும் என எதிர்வுகூறப்பட்டள்ளது. இந்த அதிகரிப்பு இன்றையதை விட 21.7 சதவீதம் அதிகமாகும். சில பகுதிகள் மற்ற பகுதிகளை விட பெரிய வளர்ச்சியைக் காணும். 

சூரிச், வாட், ஜெனீவா மற்றும் Zug ஆகிய மாகாணங்கள் மிக அதிகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகை அதிகரிப்பை சந்திக்கின்றன. இது தேசிய சராசரியை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், டிசினோ இந்தப் போக்கிற்கு விதிவிலக்கு. அதன் மக்கள் தொகை 4.7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சரிவு டிசினோவில் சுவிட்சர்லாந்தில் அதிக வயதுடைய மக்கள் தொகை இருப்பதால், அங்கு பிறப்புகளை விட அதிக இறப்புகள் நிகழ்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4