வவுனியா மாவட்டத்தில் 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு!
#SriLanka
Mayoorikka
5 months ago

கடந்த 2024 ஆம் ஆண்டு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை, சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிர் செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது.
எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.



