வெளியிடங்களில் உணவுகளை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!
#SriLanka
Dhushanthini K
6 months ago

வரும் பண்டிகை காலம் மற்றும் சுற்றுலாவிற்காக சென்றுள்ளவர்கள் உணவுகளை கொள்வனவு செய்யும் விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அசுத்தமான கடைகளில் உணவுகளை கொள்வனவு செய்வதன் மூலம் வயிற்றுபோக்கு, மற்றும் காய்ச்சல் ஏற்பவடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



