அரசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை!
#SriLanka
#rice
Thamilini
11 months ago
அரசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இறக்குமதி செய்யும்போது ஏற்படும் சவால்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தையில் அரிசிக்கான விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களில் 67000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 430 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.