இந்தியாவுக்கு அளித்து வந்த மிகவும் விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்த்தை ரத்து செய்த சுவிஸ் நிர்வாகம்

#India #Switzerland #government
Prasu
1 year ago
இந்தியாவுக்கு அளித்து வந்த மிகவும் விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்த்தை ரத்து செய்த சுவிஸ் நிர்வாகம்

நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதுநாள் வரையில் இந்தியாவுக்கு அளித்து வந்த மிகவும் விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்த்தை சுவிஸ் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் இந்த அதிரடி முடிவு இருதரப்பு ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் சுவிஸ் முதலீடுகள் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.

டிசம்பர் 11 அன்று, சுவிஸ் நிதித் துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு இந்தியாவுக்கான விரும்பத்தகுந்த தேசம் அந்தஸ்தை அகற்றுவதற்கான அதன் முடிவிற்கு 2023 தீர்ப்பைக் காரணம் காட்டியது.

மேலும், OECDயில் ஒரு நாடு இணையும் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான விரும்பத்தகுந்த தேசம் என்ற விதி தானாகப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

 குறிப்பாக இந்திய அரசாங்கம் அந்த குழுவில் சேர்வதற்கு முன்பு அந்நாட்டுடன் ஏற்கனவே வரி ஒப்பந்தம் செய்திருக்கும் என்றால். OECD என்பது 1961 ல் உருவாக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4