நாட்டின் பல பகுதிகளில் 100MM மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
Thamilini
1 year ago
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (23.11) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.